பூவரசு மரம்




     மரங்கள்தான் மனிதவாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராணவாயுவை மட்டும்தருவதில்லை. மனிதர்கள்ஆரோக்கியமாக வாழதன்னால் இயன்றஅனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன்போல் நோய்தீர்க்கும் மாமருந்தாகஇருப்பதால்தான் இதனைபூவரசு என்றுஅழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்குமேல் வாழக்கூடியமரங்களுள் பூவரசும்ஒன்று.

     காயகல்ப மரமானபூவரசு பூமிக்குஅரசன் என்றுஅழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவஇலைகளைக் கொண்டஇந்த மரம்இந்தியா முழுவதும்காணப்படும். குறிப்பாகதென்னிந்தியாவில் அதிகமாகக்காணப்படுகிறது. இதுகொட்டைப் பூவரசுசாதாரணப் பூவரசுஎன இருவகைப்படும். விதைகள்இல்லாமல் சப்பையானகாய்கள் இருப்பதுசாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசுகாய்களை உடைத்தால்உள்ளே நிறையவிதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர்மற்றும் பட்டைமுதலியன மருத்துவப்பயன் கொண்டவை

அனைத்து வகைதோல் நோய்களுக்கும்அருமருந்தாகும்
     பூவரசு இலையில்`பீப்பீ' செய்துஊதி விளையாடியஅந்தப்பொழுதுகள் இன்றைக்கும்நினைவில் நிழலாடுகிறது, அந்த பூவரச மரம்கூட நம்மால் பார்க்கமுடிவதில்லை.
அன்றைய காலத்துகிராமத்துச் சிறுவர்களின்விளையாட்டுப்பொருளாக இருந்துவந்த பூவரசுமரம் கிணற்றுமேடுகளில்நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும்கமலையை இழுத்துவரும்மாடுகள் சோர்ந்துபோகாமல் இருப்பதற்காகஇதை நட்டுவைத்திருந்தார்கள். இந்தமரங்கள் ஆக்சிஜனைஅதிகளவு உற்பத்திசெய்யும் மரங்களில்ஒன்று என்பதால்கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில்நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர்இறைக்கும் கமலைகள்மட்டுமல்ல மாடுகளும்இல்லை, அவைஇளைப்பாறுவதற்காக நடப்பட்டமரங்களும் இல்லை.

     அதுமட்டுமல்ல சுமார்20 ஆண்டுகளுக்கு முன்மார்கழி மாதத்தின்காலைப்பொழுதுகளில் நம்வீட்டுப்பெண்கள் தமிழ்க்கலாசாரத்தின் அடையாளங்களில்ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல்முக்கியமானது. வீடுகளின்முற்றங்களில் விழுந்துகிடக்கும் இலைதழைகள்மற்றும் குப்பைகளைஅகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப்பின்புறம் இருக்கும்உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில்இருந்து சாணம்எடுத்து வந்துநீர் விட்டுக்கரைத்துத் தெளித்துமாக்கோலம் இட்டுஅதன் நடுவேசாணத்தில் பிள்ளையார்பிடித்து அதில்பூவரசம் பூவைசெருகி வைப்பார்கள். இது மரபின்மருத்துவம் என்றால்அது மிகையாகாது.

     பூவரசம் மரத்தின்தாவரவியல் பெயர்தெஸ்பீசியா பாபுல்னியா(Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால்பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்றவேறு பெயர்களிலும்அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றநூல்களிலும் பூவரசுமரம் பற்றிகுறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின்யாழ்ப்பாணம் மாவட்டத்தின்தென்மேற்குப்பகுதியில் உள்ளஏழு தீவுகளில்ஒன்றான புங்குடுதீவில்பூவரசு மரங்கள்நிறைந்த காடுஇடம்பெற்றிருக்கிறது.

     இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க பூவரசுமருத்துவக்குணம் நிறைந்ததுஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் எனஎல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள்உண்டு. பூவரசுஇலையை அரைத்துசொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப்பற்று போட்டுவந்தால் பலன்கிடைக்கும். பூவரசுமரத்தின் காய்களைஅம்மி அல்லதுகருங்கல்லில் உரசினால்வரக்கூடிய மஞ்சள்நிறப்பாலை தேமல்உள்ள இடங்களில்தடவி வந்தால்நாளடைவில் தேமல்அகலும். படர்தாமரைஎன்று சொல்லக்கூடியதோல் நோயும்குணமாகும். கை-கால்மூட்டு வீங்கியிருந்தாலும்இதே மஞ்சள்நிறப்பாலை பூசினால்குணம் கிடைக்கும்.

     பல்வேறு காரணிகளால்வளியெங்கும் விரவிக்கிடக்கும்கரியமில வாயுவைஉறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவைவெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும்இருக்க வேண்டியமுக்கியமான மரம்என்கிறார்கள், சுற்றுச்சூழல்ஆர்வலர்கள். இந்தமரம் கடுமையானபுயலிலும் சாயாததன்மைகொண்டது...அப்படியேசாய்ந்தாலும் சாய்ந்தநிலையிலேயே வளரும்தன்மை கொண்டது. பீரோ, கட்டில்போன்ற பொருட்கள்செய்வதற்கு அந்தகாலத்தில் பூவரசுமரத்தின் பலகையைத்தான்பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்குவந்த பிறகு, பூவரச மரத்தைசீண்டுவாரில்லை. ஆனாலும்இன்றைக்கும் பூவரசின்மகத்துவம் அறிந்தவர்கள்இதனை தேடித்தேடி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

     பூவரசு மரத்தின்வேர்ப்பட்டையை நீர்விட்டு நீர்சேர்த்து கொதிக்கவைத்து அதில்50 மில்லி அளவுஎடுத்து 10 மில்லிவிளக்கெண்ணெய் சேர்த்துகாலையில் வெறும்வயிற்றில் குடித்துவந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல்நோய்களிலிருந்து விடுதலைகிடைக்கும்செதில்செதிலாக உதிரக்கூடியசொரியாசிஸ் நோய்க்குபூவரசம்பட்டை நல்லமருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆனபூவரசு மரத்தின்பட்டையுடன் காய், பூ சேர்த்துப்பொடியாக்கி காலை, மாலை ஒருடேபிள்ஸ்பூன் வீதம்சாப்பிட்டு வந்தால்பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின்பட்டையை இடித்துச்சாறு எடுத்துஅதை வாயில்வைத்துக் கொப்புளிப்பதோடுஉள்ளுக்குள் விழுங்கிவந்தால் உதட்டில்வரக்கூடிய வெண்தேமல்சரியாகும்.

     சர்க்கரை நோயாளிகளுக்குப் புண்ஏற்பட்டால் அதுஆறாமல் மிகுந்தபிரச்னையை ஏற்படுத்தவாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில்பூவரசம்பட்டையை நீர்விட்டுக் கொதிக்கவைத்து சூடுஆறியதும் கழுவிவந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடியசெயின், கைக்கடிகாரம்போன்றவற்றை அணிவதால்சிலருக்குத் தோலில்கருமை நிறம்ஏற்படும். அப்படிப்பட்டசூழலில் பூவரசம்பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டுகாய்ச்சி சூடுஆறியதும் கருமைநிறத்தின் மீதுபூசி வந்தால்கரும்படலம் நாளடைவில்மறையும்அல்சைமர்எனும் ஞாபகமறதிநோய்க்கும் சிறந்தமருந்தாகப் பயன்படுகிறதுஎன்று சித்தமருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் காமாலைகுணமடையும்
     கல்லீரலின் பலவீனம்தான்மஞ்சள் காமாலைநோயின் தாக்கம். பூவரச மரத்தின்பழுத்த இலைஇரும்புச் சத்துநிறைந்தது. பழுத்தஇலைகளுடன் 1 ஸ்பூன்சீரகம் சேர்த்துஅரைத்துக் குடித்தால்மஞ்சள் காமாலைநோய் குறையும். இது மஞ்சள்காமாலை நோயைஅறவே நெருங்கவிடாமல் உடலைபாதுகாக்கும்.

மேக நோய்க்குமருந்து
     உடல் கிருமிகளைஅழிக்க வல்லசக்தி கொண்டதுபூவரசு என்றுஅகத்தியர் கூறியுள்ளார். இதன் காயைஇடித்து சாறுஎடுத்தால் பசபசப்புடன்பால் இருக்கும். இது மேகநோய்களை போக்கசிறந்த மருந்தாகும். இது சித்தர்கள்கண்ட அனுபவமருந்தாகும்.

சொறி, சிறங்குகுணமாகும்
     நூறு வருடமானபூவரச மரத்தின்வேரை நன்குஉலர்த்திப் பொடிசெய்து முறைப்படிஉண்டு வந்தால்தொழுநோய் குணமாகும்.பூவரசம் வேர்ப்பட்டையைநீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி.யுடன்10 மி.லி. ஆமணக்கு எண்ணெய்சேர்த்து காலைவெறும் வயிற்றில்குடிக்க பேதியாகும். பேதி நிற்கமோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படைநோய்கள் குணமாகும்.

     தேக்கு, கோங்குபோன்ற மரங்கள்வரிசையில் சிறந்தமரம் இந்தபூவரசு மரம். இம் மரம்வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும்ஏற்றவை. இம்மரங்களை வீட்டுஉபயோகத்துக்காகவும், ஏனையபயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்கமுன்வரவில்லை. இதனால்கொஞ்சம் கொஞ்சமாகஅழிந்த இந்தமரம் தற்போதுகாண்பதற்கு அரிதாகமாறிவிட்டது. தற்போதுகிராமப்புறங்களில் இந்தபூவரச மரம்காண்பதே அரிதாகிவிட்டது

     மருத்துவக்குணம் நிறைந்தபூவரசு மரம்மிக எளிதாகவளரக்கூடியது. அதன்கிளைகளை வெட்டிநட்டாலே தளிர்விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப்பெறுவதோடு நோய்களையும்வெல்வோம்; மீண்டும்`பீப்பீ' ஊதப்புறப்படுவோம்.

கருத்துகள்