காங்கேயம் ஒன்றியம் பெரிய இல்லியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 15 .10 .2019 அப்துல் கலாம் பிறந்த நாள் நினைவாக பூக்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்காக நூறு விதைகளும் 100கவர்களும் வழங்கப்பட்டு நாற்று வளர்த்து அளித்து உதவிட மாணவர்களுக்கான செயல்திட்டம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் சிறப்பான முறையில் பள்ளியில் பராமரித்து வளர்த்து ஜனவரி 26 குடியரசு தினம் அன்று பூக்கள் அனுப்பு திரு சிவகுமார் அண்ணன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் செயலை பாராட்டி செயல்வீரர் சான்று பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த பூக்கள் அன்பிற்கு பள்ளி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் திருமதி செல்வி அவர்களும் திருமதி விஜயலட்சுமி திருமதி சுதா மற்றும் திரு சுரேஷ் ஆசிரியர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக